சொன்னதை செய்த முதலமைச்சர்! மகிழ்ச்சியில் போராட்டக்காரர்கள்!

0
63

நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட சுமார் 446 வழக்குகளும், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட 422 வழக்குகளும், என ஒட்டுமொத்தமாக 868 வழக்குகளைத் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் ஆணையிடுகிறார்.

அதாவது இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் சென்ற ஜூன் மாதம் 24 ஆம் தேதி அன்று சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து சமயத்தில் கடந்த கால ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள், மீத்தேன் நியூட்ரினோ கூடங்குளம் அணு உலை, சேலம் எட்டு வழி சாலை, உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் திரும்பப் பெறப்படும் என்று கூறியிருந்தார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதத்தில் சுமார் 5570 வழக்குகள் இதற்கு முன்னரே திரும்ப பெறப்பட்டு இருக்கின்றன. அதன் அடுத்த படியாக கடந்த 13ஆம் தேதி அன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் செய்தவர்கள். மீது முன்னாள் அதிமுக அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார்.

அந்த அறிவிப்பையும் செயல்படுத்தும் விதத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அறப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் என்று அனைத்து விதமான வழக்குகளையும் வாபஸ் பெறவும், அதன் மீதான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் ஆணையிட்டிருக்கிறார்.