காஷ்மீருக்குள் ஊடுருவ தயார் நிலையில் 200 பயங்கரவாதிகள்! உஷார் நிலையில் இந்திய ராணுவம்!

0
66

கடந்த 2019ஆம் ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியை அவ்வளவு எளிதில் இந்தியர்கள் யாரும் மறந்துவிட முடியாது. அப்படி ஒரு மிகப்பெரிய துயர சம்பவம் நடைபெற்ற நாள் அன்றைய தினம்.

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் சிஆர்பிஎஃப் எனப்படும் துணை ராணுவ படையினர் அணிவகுத்து சென்று கொண்டிருந்த சமயத்தில், ஒரு இளம் தீவிரவாதி காரில் வெடி மருந்துகளை நிரப்பி மனித வெடிகுண்டாக மாறி ராணுவ வீரர்களின் வாகனத்தில் மோத அங்கே சென்று கொண்டிருந்த ராணுவ வாகனங்கள் அனைத்தும் வெடித்து சுக்கு நூறாகி போயினர். இதில் சுமார் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தார்கள்.

அந்த சமயத்தில் இந்த சம்பவம் இந்திய அளவில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது.

இதன் பிறகு அந்த தாக்குதலுக்கு காரணமாக, இருந்த பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பை ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்க திட்டமிட்ட இந்திய ராணுவம் நின்று நிதானமாக எதிர்வினை ஆற்றியது. அதனடிப்படையில் 12 மிரேஜ் 2000 போர் விமானங்கள் மூலமாக 1000 கிலோ வெடி மருந்துகளுடன் பாகிஸ்தானில் அந்த தீவிரவாத அமைப்புகள் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்த இந்திய ராணுவம், இரவோடு இரவாக அந்த தீவிரவாத முகாமை அழித்தொழித்தது.

ஆனால் இதற்கு முன்பாகவே ராணுவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி முழு சுதந்திரத்தை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, இந்த சம்பவத்திற்கு எப்போது, எங்கே, எப்படி, பதிலடி கொடுக்கலாம் என்பதை இந்திய ராணுவமே முடிவு செய்து கொள்ளலாம் என்று அப்போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வடக்கு பிராந்திய ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி நேற்று காஷ்மீரின் உதம்பூர் நகரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, சென்ற வருடம் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னர் எல்லையில் போர் நிறுத்த விதி மீறல்கள் குறைந்திருக்கின்றன. கடந்த 13 மாதங்களில் 3 விதிமீறல்களே நடந்திருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில் எல்லைக்கு அப்பால் பயங்கரவாத கட்டமைப்புகள் அப்படியே இருக்கின்றன. மிகப்பெரிய அளவிலான 6 பயங்கரவாத முகாம்களும், சிறிய அளவிலான 29 பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

பல்வேறு இராணுவ நிலைகளுக்கு அருகே தற்காலிக பயிற்சி முகாம்கள் இயங்கி வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், பயங்கரவாத கட்டமைப்புகள் நீடித்திருப்பதற்கு பாகிஸ்தான் ராணுவம் தான் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

எல்லைக்கு அப்பால் காஷ்மீருக்குள் ஊடுருவ தயார் நிலையில் 200 பயங்கரவாதிகள் இருக்கிறார்கள், அதேநேரம் ஊடுருவலை தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர் என தெரிவித்திருக்கிறார்.

பயங்கரவாதிகள் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகள் மூலமாக மட்டுமே ஊடுருவது கிடையாது. ஜம்மு, பஞ்சாப், நேபாளம், உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சர்வதேச எல்லை மூலமாகவும் ஊடுருவி வருகிறார்கள்.

அவர்களை அடையாளம் கண்டுகொண்டு மிக விரைவில் அழிப்பதுதான் எங்களுடைய நோக்கம் என தெரிவித்திருக்கிறார்.

காஷ்மீரில் தற்சமயம் 40 முதல் 50 வரையிலான உள்ளூர் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள். வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியவில்லை.

ஆனால் ஒவ்வொருநாளும் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த வருடம் இதுவரையில் 21 வெளிநாட்டு பயங்கரவாதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன என கூறிவுள்ளார்.

கொல்லப்பட்ட உள்ளூர் பயங்கரவாதிகள் போதிய பயிற்சியின்றி வெறும் கைத்துப்பாக்கியுடன் இருந்திருக்கிறார்கள். இளம் பருவத்தினரை மூளைச்சலவை செய்து பயங்கரவாத இயக்கத்தில் சேர்ப்பது கவலையை வழங்குகிறது.

இதன் காரணமாக, அவர்களை மூளைச் சலவையிலிருந்து விடுவிக்க முயற்சி செய்து வருகிறோம் என கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் சாலைகளில் ராணுவத்தினர் தேவையில்லை என்ற ஒரு நாள் வரும்போது ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் தானாகவே நீங்கிவிடும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு தான் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அமர்நாத் யாத்திரைக்கு வருபவர்கள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதில் பயங்கரவாத தாக்குதல் நடக்காத அளவிற்கு கண்காணித்து வருகிறோம், கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.