நிச்சயமா அங்க நாங்க தான் போட்டியிடுவோம்…! நயினார் நாகேந்திரன் அதிரடி பேட்டி…!

0
98

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் மணமக்களை வாழ்த்தி பேசினர் அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் தலைமை விரும்பினால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயார் எனவும்

விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணி அமைப்பது அவரின் விருப்பம் அதுபற்றி அவர் மட்டும் தான் முடிவெடுக்க முடியும் எனவும்

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆளுநர் கையெழுத்து ஒப்புதல் தராமல் இருப்பதெல்லாம்
ஒரு பெரிய விஷயமே இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் தலைமை விரும்புமே ஆனால் நான் போய் தூங்குகிறேன் என்றும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான அது 50% இட ஒதுக்கீட்டை இந்த வருடம் வழங்க இயலாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எந்த கருத்தும் கூற இயலாது என்றும் கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமானால் நிச்சயமாக நாங்கள்தான் போட்டியிடுவோம் எனவும் நடிகை குஷ்பு பாரதிய ஜனதாவிற்கு மிகப்பெரிய பலம் என்றும் கூறியிருக்கின்றார்.