நயன்தாரா பெரிய மல்டிபிளெக்ஸ் தியேட்டர் கட்டுகிறாரா உண்மை இதுதான்

0
161
Nayanthara is building a big multiplex theater this is the truth
Nayanthara is building a big multiplex theater this is the truth

நயன்தாராவின் அடுத்த டார்கெட்!! புதிதாக கட்டப்படும் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்??

நடிகை நயன்தாரா, சென்னையில் உள்ள பிரபல திரையரங்கை வாங்கி அந்த இடத்தில் புதிய மல்டிபிளெக்ஸ் கட்ட உள்ளதாக வெளியான தகவல் உண்மை. சினிமாவில், லேடிஸ் சூப்பர் ஸ்டார், என்கிற பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழில்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

நயன்தாரா பல்வேறு மொழிகளில் நடித்திருந்தாலும், தமிழ் திரையுலகமும், ரசிகர்களும், இவருக்கு அடுத்தடுத்த வெற்றிகளையும், லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தையும் பெற்றுள்ளார். என்னவோ இதன் காரணமாக தமிழ் நாட்டு மருமகளாக மாறினார் நயன்தாரா. மேலும் சம்பாதிக்கும் பணத்தை தற்போது பல விதமான தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்.

ஏற்கனவே ஒரு டீ பிராண்டில் முதலீடு செய்துள்ளார். இதனையடுத்து சென்னையில் உள்ள அகஸ்தியா தியேட்டரை நயன்தாரா வாங்கி விட்டதாக தகவல் வெளியானது. மேலும் அதை இடித்துவிட்டு விரைவில் ஒரு பெரிய மல்டிப்ளெக்ஸ் கட்ட இருக்கிறார் என்றும் செய்தி வெளியானது. இந்நிலையில் அந்த செய்தி உண்மை இல்லை என கூறுகின்றனர்.

அந்த தியேட்டரை தனி நபர் விற்க முடியாது. அது டிரஸ்ட் ஒன்றிற்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. இடிக்கப்பட்ட அந்த தியேட்டரை இருக்கும் இடத்திலே கண் மருத்துவமனை கட்ட போகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Parthipan K