நவராத்திரி புராணக்கதை!

0
108

முற்காலத்தில் வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அனைத்திலும் சிறந்து விளங்கியவர். இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாருமில்லை என்ற தலைக்கனம் இவருக்கு உண்டானது. பதவியும், தலைக்கனமும் உண்டானால் அடுத்தவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வருவது இயல்பு தானே.

அந்த முனிவருக்கும் அதே நிலை வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் உள்ளிட்ட மாபெரும் முனிவர்களிடம் எருமை போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார்.

ஆகவே கோபம் கொண்ட முனிவர்கள் எல்லோரும் எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர். ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சும் விதமாக அவன் முன்னர் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என்று வேண்டினான்.

உடனடியாக அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன் ரம்பன் நீ கேட்ட வரத்தை வழங்கினேன். நீ எந்த பெண்ணை கண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலமாக உனக்கு மகன் பிறப்பான் என்று தெரிவித்து மறைந்தார். மனம் முழுவதும் உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை, அவனுடைய அசுர புத்தி வேலை செய்தது. காட்டன்மையின் மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாக பிறப்பாய் என்று சாபம் பெற்ற முனைவர் அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.

மகிஷாசுரன் 10,000 ஆண்டுகள் பிரம்ம தேவனை நோக்கி தவம் புரிந்தான். எனக்கு தேவர்கள், அசுரர்கள் மற்றும் மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப் பெண்களால் தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்ட வரத்தை வழங்கினார் பிரம்மதேவன். அங்கு தான் ஆரம்பமானது பிரச்சனை.

மகிஷாசுரனின் அராஜகம் அதிகமானது மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர் தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண் தான் அவனை சம்சாரம் செய்ய தகுந்தவள் மகாசக்தி மட்டும்தான் என்று தெரிவித்தார் மகாவிஷ்ணு.

மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்தவுடன் ஸத்வ,ரஜஸ், தமஸ் என்ற 3 குணங்களையும் ஒன்றாகப்பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினார் அம்பாள்.

தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களை படைத்தனர். சிவபெருமான் சூலத்தை வழங்கினார். அக்னி சக்தியை வழங்கினார். வாயு பகவான் வில்லும் அம்பறாதுணியும் வழங்கினார்.

தேவி மகிஷனை சம்ஹாரம் செய்ய சர்வ அலங்கார பூசிதையாய் புறப்பட்டார். அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன் கடும் போர் முடிவுக்கு வந்தது அநீதி அழிக்கப்பட்டது அழிந்தான் மகிஷாசுரன்.

அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவி மணித்வீபம் சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று இந்த நாட்கள் தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாக கொண்டாடப்படுகிறது.