65 வயதிலும் 25 போல் சுறுசுறுப்பாக இருக்க இதை சாப்பிடுங்க!

0
56

இன்றைய காலகட்டத்தில் அனைத்து நோய்களும் உணவு குறைபாடு மற்றும் சத்து குறைபாடு தான் ஏற்படுகின்றன. சிறியவர்கள் சிறிது நேரம் உழைத்தாலும் உடனே கை, கால் வலிக்கிறது என்று சோர்வாக உட்கார்ந்து விடுவார்கள். அப்படி அவர்கள் சோர்வோடு இருப்பதற்கு காரணம் சத்துக் குறைபாடுகள் தான். அதேபோல் பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் சிறிது நேரம் வேலை செய்தாலும் உடனே கழுத்து வலி, மூட்டு வலி, கை கால் வலி என்று அவர்களுக்கு வந்து விடும். இதற்கு காரணம் உடலில் எலும்புகள் தேய்மானம் அடைந்து சத்துக் குறைவினால் தான். மூன்று நாட்கள் தொடர்ந்து இதை சாப்பிட்டு வாருங்கள் நிச்சயமாக 65 வயதிலும் 25 போல் மாறி சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள்.

தேவையான பொருட்கள்:

1. பாதாம் பருப்பு 10

2.காய்ந்த திராட்சை 10

3.பால் ஒரு டம்ளர்

4.நாட்டு சக்கரை

செய்முறை:

1. முதலில் பாதாம் பருப்பு காய்ந்த திராட்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.

2. அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

3. பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவிற்கு பாலை ஊற்றி காய்ச்சவும்.

4. ஒரு கொதி வந்ததும் நறுக்கி வைத்த பாதாம் பருப்பு மற்றும் காட்சியை போட்டு கொதிக்க வைக்கவும்.

5. இரண்டும் நன்கு வெந்து வரவேண்டும்.

6. பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்,

7. அவ்வளவுதான் தயார்.

8. இந்த பாலை தூங்கப் போவதற்கு முன் குடிக்கவேண்டும். சாப்பிட்டதற்கு பின் அரை மணி நேரம் கழித்து இந்த பாலை உண்டு பத்து நிமிடம் கழித்து தூங்க போகலாம்.

9. இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வரும் பொழுது உடல் வலிமை பெற்று மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.

author avatar
Kowsalya