சுயநலம் மிக்கவர் நாராயணசாமி! நமச்சிவாயம் குற்றச்சாட்டு!

0
75

புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி மீது இருந்த கோபம் காரணமாக, புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் சமீபத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்பு புதுச்சேரிக்கு வந்த நமச்சிவாயத்திற்கு அவருடைய ஆதரவாளர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தார்கள்.

இதனையடுத்து, புதுச்சேரியின் பாஜக அலுவலகத்திற்கு முதல் முறையாக சென்ற நமச்சிவாயத்தை அந்த மாநிலத்தில் பாஜக தலைவர் சாமிநாதன் மற்றும் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றார்கள்.

இதனை அடுத்து நடந்த பொதுக்கூட்டத்தில், உரையாற்றிய நமச்சிவாயம் தங்களைப் போல பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளிவந்து பாஜகவில் இணைவதற்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். மக்களை ஏமாற்றுவதை முதல் அமைச்சர் நாராயணசாமி வைத்திருக்கிறார் என்று தெரிவித்த நமச்சிவாயம், அவருடைய மக்கள் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஆளுநர் கிரண்பேடி தடையாக இருக்கிறார் என்றும், அவர் பிரச்சனைகளை திசை திருப்ப முயற்சி செய்கிறார் என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார்.

மாநிலத்தை வளர்ச்சி அடையச் செய்யாமல் அவருடைய சுய அரசியல் லாபத்துக்காக, மாநிலத்தை ஒரு போராட்டக் களமாக மாற்றி இருக்கிறார் என்று விமர்சனம் செய்தார். அதோடு முதல் அமைச்சர் நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட தயாராக இருக்கிறேன் என்று நாராயணசாமிக்கு சவால் விடுத்து இருக்கிறார் நமச்சிவாயம்.