விஷோலோடு மோதி சிம்புவிடம் ஐக்கியமான மிஷ்கின்: உருவானது புதிய கூட்டணி !

0
65

விஷோலோடு மோதி சிம்புவிடம் ஐக்கியமான மிஷ்கின்: உருவானது புதிய கூட்டணி !

சிம்பு நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்ச. சிறுபட தயாரிப்பாளராக இருந்த அவருக்குப் பலரும் சிம்பு படம் வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் துணிந்து இறங்கினார் சுரேஷ் காமாட்சி. ஆரம்பகட்ட பணிகளுக்காகவே ஒருசில கோடிகளை செலவு செய்தார். ஆனாலும் சிம்புவால் காலதாமதம் ஏற்பட்டு படத்தை டிராப் செய்வதாக அறிவித்தார். அதன் பின் சிம்பு மீண்டும் அந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவிக்க ஒருவழியாக படம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் மாநாடு படத்தை முடித்ததும் சிம்பு தனது அடுத்த படத்தை இயக்க முன்னணி இயக்குனர் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் வேறு யாருமில்லை பிக்பாஸ் மூலம் மீண்டும் பிரபலமான இயக்குனர் சேரன் தான். அவர் சொன்ன கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்ததால் அவருக்கே அடுத்த படத்தின் கால்ஷீட்டை அவர் கொடுத்துள்ளார் கடந்த வாரம் ஒரு செய்தி வெளியானது. இந்த படத்தில் சிம்புவோடு விஜய் சேதுபதியும் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது மாநாடு படத்துக்குப் பின்னர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க சம்மதம் சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. மிஷ்கின், விஷாலை வைத்து இயக்கிய துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வந்தார். ஆனால் லண்டன் படப்பிடிப்பின் போது விஷால் மற்றும் மிஷ்கின் தரப்புக்கு இடையே எழுந்த மோதலால் படத்தில் இருந்து அவர் விலகினார். மீதிப்படத்தை விஷாலே இயக்க உள்ளார். இந்நிலையில் இப்போது மிஷ்கினோடு சிம்பு கைகோர்த்துள்ளதால் அந்த படத்தின் மீதானப் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

author avatar
Parthipan K