பேரறிவாளனோடு இணைந்து பாடிய இயக்குனர் மிஷ்கின்!

0
114

பேரறிவாளனோடு இணைந்து பாடிய இயக்குனர் மிஷ்கின்!

இயக்குனர் மிஷ்கினின் 50 ஆவது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

இயக்குனர் மிஷ்கின் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அதில் ஆண்ட்ரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பூர்ணா, சந்தோஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த நாளில் ரிலீஸ் ஆகவில்லை. விரைவில் இந்த திரைப்படம் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர் மிஷ்கினின் 50 ஆவது பிறந்தநாள் சென்னையில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடந்தது. அந்த நிகழ்வில் தமிழ் இலக்கிய உலகை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.  விஜய் சேதுபதி உள்ளிட்ட சினிமா துறையை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் சமீபத்தில் ராஜிவ் கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை அனுபவித்த பேரறிவாளனும் அவரின் தாயாரும் கலந்துகொண்டுள்ளனர். அப்போது பிறந்தநாள் விழாவில் நடந்த இசைக் கச்சேரியில் இயக்குனர் மிஷ்கினும் பேரறிவாளனும் இணைந்து இளையராஜாவின் ஹிட் பாடலான “தென்றல் வந்து தீண்டும் போது என்ன எண்ணமோ” பாடலை பாடியுள்ளனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.