என் வாழ்வும்!!என் சாவும் நீதானடி!!..சினிமாவை போலவே நிகழ்ந்த கணவன் மனைவி பிரிவு?..

0
164
My life!! My death is yours!!..Husband and student division happened like a movie?..
My life!! My death is yours!!..Husband and student division happened like a movie?..

என் வாழ்வும்!!என் சாவும் நீதானடி!!..சினிமாவை போலவே நிகழ்ந்த கணவன் மனைவி பிரிவு?..

விருத்தாசலம் அருகே உள்ள பெரியாக்குறிச்சியை சேர்ந்தவர் தான் ராம்ராஜ்.இவருடைய வயது 32.இவரது மனைவி வெண்ணிலா.இவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஆனால் அந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.இதனால் கணவன் மற்றும் மனைவி இருவரும் மனமுடைந்து இருந்து வாழ்ந்து வந்தார்கள்.

இந்நிலையில் குழந்தையின் ஏக்கம் மாணவி வெண்ணிலாவை அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியது.இதனால் ஏக்கம் கொண்ட வெண்ணிலா கடந்த மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெண்ணிலா உயிரிழந்தார்.

அதில் வேதனையடைந்த கணவன் ராம்ஜாஜ் சிதம்பரம் அருகே உள்ள மணலூரில் தனது அக்கா ராதா வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில் கடந்த வாரம் தன் வீட்டிற்கு சென்று வருவாதாக கூறி அக்கா வீட்டிலிருந்து சென்றுள்ளார்.வீட்டிற்கு சென்ற ராம்ராஜ் தனது  அக்காவிடம் கூட தொலைபேசியில் தொடர்பு கொள்ள வில்லை.

அதில் அச்சமடைந்த பயந்து போய் பெரியாக்குறிச்சியில் தனது தம்பி வீட்டிற்கு நேரில் சென்று பார்த்தார்.அப்போது அழுகிய நிலையில் ராம்ராஜ் சடலம் கிடந்தது.இதனை கண்ட அக்கா ராதா கதறி அழ ஆரம்பித்தார்.

மேலும் போலீசாரிடம் இதை பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்கள் ராம்ராஜ் உடலை கைபற்றி பிரேதா பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மனைவி இறந்த துயரத்தில் கணவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதிமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

author avatar
Parthipan K