நாவூற வைக்கும் கிராமத்து ஸ்டைல் ரத்த பொறியல்.. அசத்தல் ரெசிபி..!

0
64

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் ஆட்டு ரத்ததை விடிற்காலையில் வாங்கி காலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவுடன் சேர்த்து சாப்பிடுவர். தற்போது கிராமத்து ஸ்டைலில் சூப்பரான ரத்த பொறியல் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.

தேவையானவை:

ஆட்டு ரத்தம் – 1 கப்

சின்ன வெங்காயம் -150 கிராம்

வர மிளகாய் – 3

சீரகம் – 2 டீ ஸ்பூன்

கடுகு – 1 டீ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் துருவல் – அரை கப்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

எண்ணெய் – 2 மேசைகரண்டி

செய்முறை :

ஆட்டுரத்ததை கழுவி அதிலிருந்து தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றவும். அதன்பின்னர், அதில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் அதில் , கறிவேப்பிலை, கடுகு, சீரகம் போட்டு தாளித்து கொள்ளவும்.

அதில், சின்னவெங்காயம் , வரமிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும். நன்கு வதங்கியதும் ரத்தத்தை சேர்த்து மிதமான தீயில் சேர்த்து கிளறவும். உதிரி உதிரியாக வந்ததும் அதில் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி பரிமாறவும்.