3 பெண் குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய்! சோகத்தில் அப்பகுதி!

0
67
Mother with 3 female children poisoned! The area is sad!
Mother with 3 female children poisoned! The area is sad!

3 பெண் குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய்! சோகத்தில் அப்பகுதி!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த குமளம் கிராமத்து சேர்ந்தவர் அருணாச்சலம். இவர்க்கு வயது 40. இவர் லாரி டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி 32. இவர்களுக்கு இடையே கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 13,9,3 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.

இவர் தனது மூன்று பெண் குழந்தையை கரை சேர்த்த வேண்டும் என்று அவர் சொந்தமாக லாரி ஒன்றை வாங்கி தொழில் செய்து வந்தார். சில காலம் இவர்கள் நன்றாக வாழ்ந்து வந்தனர். அவர் கையில் நிறைய பணத்தை பார்த்ததுதும் செலவு பண்ண தொடங்கினர். தினமும் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதற்கிடையே கண்டமங்கலம் கலித்திரம்பட்டு கிராமத்தில் சொந்தமாக வீடு கட்டினர். இவர் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு லாரியை விற்றுவிட்டார்.

நேற்று முன் தினம் மாலை வழக்கம் போல் குடித்துவிட்டு வந்து மனைவிடம் தகராறு செய்து அவளை தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த  சாந்தி இவன் இனிமே நம்மள வாழ விட மட்ட என்று எண்ணி சாப்பாட்டில் எலி மருந்தை கலந்து மூன்று பெண்கள்களுக்கும் கொடுத்துவிட்டு அவளும் சாப்பிட்டுயுள்ளர். இரவு 8 மணி அளவில் மயங்கி கிடந்த நாலு பேரையும் உறவினர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

author avatar
CineDesk