அந்தரங்க பகுதியில் அன்னையே சூடு வைத்த அவலம்..!

0
90
A girl showing 5 with her fingers

கோழிக்கோடு :

ஆன்லைன் வகுப்பினைக் கவனிக்காத 6 வயது குழந்தையை கொடூர குணம் கொண்ட தாய் ஒருவர் சூடு வைத்து கொடுமை செய்துள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 6 வயது நிரம்பிய குழந்தை ஒன்று உடம்பில் பல இடங்களில் தீக்காயங்களுடன் உறவினர்கள் மூலமாக அக்குழந்தை கொண்டு வரப்பட்டது.

குழந்தையின் காயத்தினை கவனித்த மருத்துவர்களுக்கு இந்த தீக்காயம் குறித்து சந்தேகம் ஏற்பட்டது.அதனையடுத்து மருத்துவ நிர்வாகம் போலிசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தது.

Mohali: Stepfather had raped girl, 12, who delivered baby | Chandigarh News  - Times of Indiaமருத்துவமனைக்கு விரைந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையின் தாய் கரண்டியை அடுப்பில் பழுக்க காயவைத்து, கால் மூட்டின் கீழ் பகுதியிலும், அந்தரங்க உறுப்பு, முகம் உட்பட பல இடங்களிலும் சூடு வைத்துள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் ,இதுகுறித்து அந்த கொடூர தாய் குழந்தை ஆன்லைன் வகுப்பில் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்ததாலும், பாடத்தினை ஒழுங்காக கவனிக்காததாலும் ஆத்திரத்தில் தான் இவ்வாறு செய்துள்ளதாக போலீசாரிடம் கூறினார்.அதுமட்டுமின்றி பலமுறை குழந்தையை அவர் இவ்வாறு தாக்கியதாகவும் அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.Absconder evading arrest since 15 years arrested in Kishtwar: Police – The  Dispatch

அந்த குழந்தையின் தாய்மாமா கொடுத்த புகாரின் அடிப்படையில் தாய் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ள நிலையில், குழந்தைக்கு நன்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, குழந்தைகள் நல அதிகாரிகள் தற்போது அந்த குழந்தையை பராமரித்து வருகின்றனர்.

author avatar
Parthipan K