காதலை கைவிட மறுத்த மகள்.. மகளை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்..!

0
89

காதலை கைவிட மறுத்த மகளை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி பாலாமடையை சேர்ந்தவர் பேச்சி. இவருக்கு திருமணமாகி ஆறுமுகக்கனி என்ற மனைவியும் அருணா என்ற மகளும் உள்ளனர். விடுதியில் தங்கி படித்து வந்த அருணா சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தலவலை அடுத்து, விரைந்து சென்ற காவல்துறையினர் சென்று பார்த்த போது அருணா பிணமாகவும் மற்றோரு பகுதியில் ஆறுமுக்கனி காயங்களுடன் இருந்துள்ளார். அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அருணா கல்லூரியில் படிக்கும் போது வேறொரு சாதி இளைஞரை காதலித்ததாக கூறப்படுகிறது. இது குடும்பத்தினருக்கு தெரிய வரவே அவரது காதலை கைவிட கோரியுள்ளனர். அதனை தொடர்ந்து அருணாவிற்கு திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.

இதனால், தாய் மகள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கிடந்த துப்பட்டாவால் அருணாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, தாய் ஆறுமுக்கனி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.