அம்மாவும் மகனும் சேர்ந்து செய்து வந்த அசிங்கம்! காதலியின் மூலம் அனைத்தும் அம்பலம்

0
623
Mother and Son involved Prostitution with the name of Love
Mother and Son involved Prostitution with the name of Love

அம்மாவும் மகனும் சேர்ந்து செய்து வந்த அசிங்கம்! காதலியின் மூலம் அனைத்தும் அம்பலம்

தன்னை நம்பி வந்த காதலியை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற வாலிபரை தக்க சமயத்தில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கல்பாக்கம் அருகிலுள்ள புதுப்பட்டினம் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த பெண் ஒருவர் சென்ற மாதம் 21 ஆம் தேதி முதல் திடீரென்று காணவில்லை என்று அவரது பெற்றோர் அருகிலுள்ள அப்பகுதியை சேர்ந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

இதனையடுத்து காணமல் போன மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரை வாங்கிக் கொண்ட காவல் துறையினர் அதனையடுத்து மாணவியை கண்டுபிடிக்கும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். காவல் துறையினர் மேற்கொண்ட இந்த விசாரணையின் போது அருகிலுள்ள ஆர்.எம்.ஐ நகர் பகுதியை சேர்ந்தவரான ஓட்டுநராக பணிபுரியும் கணேஷ் என்ற நபரின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது காவல் துறையினரே எதிர்பார்க்காத பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது.

விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளதாவது, ஓட்டுனர் கணேஷ் என்பரும் அந்த மாணவியும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அந்த மாணவிக்கு ஆசைக்காட்டி அந்த சிறுமியை சென்னைக்கு இந்த கணேஷ் அழைத்து சென்றுள்ளார்.இதனையடுத்து அங்கிருந்து குஜராத் மாநிலத்திற்கு சென்ற அவர்கள் இருவரும் அங்கே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கணேஷின் தாயாரான சுகாசினி என்பவர் தனியார் டிராவல் ஏஜென்சி வைத்து நடத்தி வந்திருக்கிறார். மேலும் இவர் நடத்தி வரும் தன்னுடைய இந்த டிராவல் ஏஜென்சி மூலமாக தமிழ்நாட்டு பெண்களை குஜராத், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இயங்கி வரும் பாலியல் ஏஜென்ட்களுக்கு சுப்ளை செய்து வந்துள்ளார்.

இந்த விசாரணையின் மூலம் சிறுமி இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட காவல் துறையினர் தீவிரமாக செயல்பட்டு சிறுமியை மீட்டு எடுத்தனர். இதனையடுத்துபெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபட்ட கணேஷை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட கணேஷின் தாயாரான சுஹாசினியையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அம்மாவும் மகனும் சேர்ந்து செய்த இந்த அசிங்கமான செயலானது கல்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல் முறையாக தமிழ் சினிமாவில் காதல் மூலமாக கட்ட பஞ்சாயத்து செய்யும் சில ஆட்களின் உண்மை முகத்தை வெளிக்கொணரும் வகையில் திரௌபதி என்ற பெயரில் ஒரு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

பல்வேறு வகையான சர்ச்சைகளை கிளப்பிய அந்த திரைப்படம் பெண்களை ஏமாற்றும் நாடக காதல் என்ற வன்கொடுமை பற்றி விழிப்புணர்வு செய்ய எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது போன்ற சம்பவங்கள் அந்த படக்குழுவினர் சொல்வது உண்மை என்றே உணர்த்துகிறது.

author avatar
CineDesk