கொரானோ வைரஸ்: பலி எண்ணிக்கை 3,000ஆக உயர்ந்ததால் அதிர்ச்சி

0
61

சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரானோ வைரஸ் தாக்குதல் அதிகம் இருந்து வரும் நிலையில் இந்த வைரஸால் பலியாகி வரும் நபர்களின் எண்ணிக்கை தினமும் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருவது அதிர்ச்சியை அளித்துள்ளது

இந்த நிலையில் இதுவரை கொரானோ வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2912 இருந்த நிலையில் தற்போது 3010 என 3000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது நேற்று ஒரே நாளில் 98 பேர் கொரானோ வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் கொரானோ வைரஸினால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவி உள்ளதால் இந்த வைரசை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
CineDesk