24 மணி நேரத்தில் 2,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

0
49

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் ஜெர்மனியில் 2,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாத இறுதிக்குப் பிறகு பதிவான சம்பவங்களில், அதுவே ஆக அதிகம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 232,000-ஐத் தாண்டியது. ஜெர்மனியில், அண்மை நாள்களில் அன்றாடக் கிருமித்தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கிருமிப்பரவல் ஆபத்து அதிகம் உள்ள சில பகுதிகளிலிருந்து திரும்பும் மக்கள், கிருமியைப் பரப்பியிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

author avatar
Parthipan K