இரண்டு கைகளும் இல்லாமல் பிரதமரின் கவனத்தை ஈர்த்த இளம்பெண்! பெண்களை பெருமைபடுத்திய நரேந்திர மோடி..!!

0
123

இரண்டு கைகளும் இல்லாமல் பிரதமரின் கவனத்தை ஈர்த்த இளம்பெண்! பெண்களை பெருமைபடுத்திய நரேந்திர மோடி..!!

இந்திய பிரதமரின் சமூகவலைதளங்களின் கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பில் மேலும் இரண்டு தமிழக பெண்கள் இடம்பிடித்துள்ளனர். நேற்று உலகெங்கும் மகளிர்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது சமூகவலைதள கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை பெண்களிடம் ஒப்படைக்க நினைப்பதாக மோடி கூறியிருந்தார். பெண்களை கெளரவிக்கும் வகையில் சொன்னபடியே, உணவு இல்லாமல் பரிதவிக்கும் ஏழை மக்களின் பசியை போக்க “உணவு வங்கி” நடத்தும் ஸ்நேகா மோகன்தாஸ் இடம் பிடித்தார். இதனையடுத்து மேலும் இரண்டு பெண்கள் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி தனது இரண்டு கைகளையும் இழந்த மாளவிகா ஐயர் என்பவரும் அட்மினாக இடம் பெற்றுள்ளார். இவர் பி.எச்டி பட்டம் முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரைப்போலவே காஷ்மீரின் கைவினை கலைஞரான ஆரீபா என்பவரும், தண்ணீர் சிக்கனம் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர் கல்பனா ரமேஷ், கான்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்க்கும் கலாவதிதேவி, மகாராஷ்டிராவின் பஞ்சாரா சமூகத்தின் பாரம்பரிய கைவினை கலைஞரான விஜய பவார் மற்றும் பீகாரின் காளாண் வளர்ப்பு தொழிலின் ஆர்வலர் வீணா தேவி ஆகியோர் இந்திய பிரதமரின் சமூகவலைதளத்தின் அட்மின்களாக பொறுப்பு ஏற்கின்றனர்.

பட்டியலில் இடம்பிடித்த அனைத்து பெண்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களின் சமூக ஆர்வலர் மற்றும் திறமைசாலிகளை தனது நிர்வாகிகளாக அமர்த்துவது மோடிக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறப்படுகிறது. மகளிரை பெருமைபடுத்தும் விதமாக செய்பட்ட மோடி அனைவரின் கவனத்தையும் குறிப்பாக பெண்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

author avatar
Jayachandiran