பிரதமரை சந்திக்க இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! காத்திருக்கும் சசிகலா!

0
83

எப்போதுமே மாநிலத்தின் முதலமைச்சர் பதவி ஏற்றவுடன் டெல்லி பயணம் செய்து பிரதமரை சந்தித்து பேசுவது இந்திய அரசியலில் இயல்பான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இந்த விதத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த மாதம் ஏழாம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்டாலின் நோய்த்தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டிவந்த தான் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் செய்ய வேண்டிய இயல்பான செயல்பாடு களில் கூட கவனம் செலுத்த இயலவில்லை என்றும் சொல்லப்படுகிறது. தற்சமயம் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு நோய் பரவல் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 16ஆம் தேதி டெல்லிக்கு சென்று அங்கே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமிட்ஷா காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆகியோரை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பள்ளிக்கு செல்ல இருக்கிறார் என்பதால் இது தமிழகத்திற்கு அரசியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக கருதப்படுகின்றது. ஆகவே ஏற்கனவே அதிமுகவில் பரபரப்பை கிளப்பி வரும் சசிகலா தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கும் நாளை எதிர்ப்பார்த்து காத்து இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேருக்கு நேர் சந்தித்த பின்னரும் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார் சசிகலா. பாரதிய ஜனதா கட்சி மற்றும் திமுக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இந்த பயணம் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே முதலமைச்சர் ஸ்டாலின் இந்த டெல்லி பயணம் தமிழகத்தில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் நிகழலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.