உத்தர பிரதேசம்: வாரணாசியில் தீனதயாள் உபாத்யாயா சிலையை மோடி திறந்து வைக்கிறார்..!!

0
63

உத்தர பிரதேசம்: வாரணாசியில் தீனதயாள் உபாத்யாயா சிலையை மோடி திறந்து வைக்கிறார்..!!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னோடியான தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

தீனதயாள் உபாத்யாயா : இந்தி தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுனர், சமூகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர், அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத்தன்மையில் சிறந்து விளங்கியவர். பாரதீய ஜனதா சங்க கட்சியின் முன்னோடியாக திகழ்ந்தவர்.

இவரது பெயரில் உள்ள நிறுவனங்கள் :

* தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனை புது தில்லி
* தீனதயாள் உபாத்யாயா கோரக்பூர் பல்கலைக்கழகம்
* பண்டிட் தீனதயாள் உபாத்யாயா கல்விக்கூடம், கான்பூரில் உள்ளது.
* தீனதயாள் உபாத்யாயா கல்லூரி
* பண்டிட் தீனதயாள் உபாத்யாயா சனாதன தர்ம பள்ளி, கான்பூர்
* தீனதயாள் உபாத்யாயா பெட்ரோலிய பல்கலைக்கழகம், குஜராத்தில் உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில்  வருகின்ற 16 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தீனதயாள் உபாத்யாயா நினைவு மண்டபத்தை இந்திய நாட்டிற்காக அர்பணிப்பு செய்கிறார். பின்னர் அங்கு நிறுவப்பட்டுள்ள 63 அடி உயர சிலையை திறந்து வைத்து பல்வேறு உதவிகளை வழங்குவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேலும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது. வாரணாசி தொகுதி பிரதமர் மோடியின் ராசியான தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran