ஸ்டாலின் நாளை வெளியிட இருக்கும் முக்கிய அறிவிப்பு! பரபரப்பில் தமிழகம்!

0
90

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட தளர்வுகள் எதுவும் இல்லாத ஊரடங்கு சென்ற மாதம் பத்தாம் தேதி முதல் 7ஆம் தேதி வரை காலை 6 மணி வரை அமலில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு அதாவது 14 ஆம் தேதி காலை 6 மணி கரையில் ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். கடந்த 7ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

அதன்படி திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த மற்ற மாவட்டங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வீடுகள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு போன்ற சேவைகள் இ பதிவுடன் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.அதோடு பிளம்பர், தச்சர், கணினி பழுது நீக்குவோர், எலக்ட்ரீசியன் போன்றோர் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையில் இ பதிவுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

சைக்கிள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களை பழுது நீக்க கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையில் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரையில் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. வாகனங்களின் உதிரிப்பாக விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் ஜூன் மாதம் 15ஆம் தேதி இதன் முழுமையான ஊரடங்கு முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஊரடங்கை நீட்டிப்பது, தளர்வுகள் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளிவரலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.