ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த அழகிரி! நடுக்கத்தில் ஸ்டாலின் தரப்பு!

0
83

தமிழகம் முழுவதும் இருக்கின்ற தன்னுடைய ஆதரவாளர்களை வரும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி மதுரை வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் மு. க. அழகிரி.

திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மறுபடியும் அரசியல் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றார் .திமுகவிலிருந்து தனக்கு எந்த விதமான அழைப்பும் வரவில்லை என்றும், அப்படி வந்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும், தெரிவித்திருக்கின்றார். அழகிரி.

அதோடு தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை செய்து அரசியலில் அடுத்த கட்ட நகர்வை அறிவிக்க இருப்பதாக தெரிவித்தார். அழகிரி உள்பட யார் கட்சியை தொடங்கினாலும் , திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று திமுக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலே, நேற்று அழகிரி தெரிவிக்கும்போது, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக என்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கின்றேன். இந்த ஆலோசனை கூட்டம் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் மதுரை பாண்டி கோவில் அருகே இருக்கின்ற,துவாரகா திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது. என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதும் இருக்கின்ற என்னுடைய ஆதரவாளர்கள் அனைவரும் நிச்சயமாக பங்கு கொள்ள வேண்டும். அனைவரும் முக கவசம் அணிந்து, வருகை தரவேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கிடையே, திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சமீபத்தில் பாஜகவில் இணைந்த அழகிரி ஆதரவாளராக அறியப்படும், கே.பி. ராமலிங்கம் மு.க. அழகிரி பாரதிய ஜனதா கட்சியில் இணைப்பதற்காக அனைத்து விதமான முயற்சிகளையும், மேற்கொண்டு வருகின்றேன், அவரை பாஜகவில் சேர்ப்பதே என்னுடைய நோக்கம் என்று தெரிவித்தார்.