ஸ்டாலின் கைதானார் ஆனால் எதற்காக கைதானார்? மீண்டும் மிசா விவகாரத்தில் சர்ச்சையை கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்

0
80

ஸ்டாலின் கைதானார் ஆனால் எதற்காக கைதானார்? மீண்டும் மிசா விவகாரத்தில் சர்ச்சையை கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்

சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானது குறித்து விமர்சனம் செய்திருந்தார்.

தற்போது இது குறித்து ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என்று தான் கூறவில்லையென என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாகக் கருத்து தெரிவித்த தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஸ்டாலின் மிசாவில் சிறை செல்லவில்லை என்றும், மேலும் அவர் கைதனதற்கான காரணங்கள் என சில சர்ச்சையான கருத்துகளையும் தெரிவித்திருந்தார். ஸ்டாலின் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட ஒன்று தான் என்றாலும் ஒரு அமைச்சராக அதை பொது வெளியில் பேசியது தான் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக திமுகவினர் பல இடங்களில் அவரது உருவப் பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், திமுக தொண்டர்களின் இந்த போராட்டத்தைக் கைவிட அறிக்கை விட்ட ஸ்டாலின், சிறை சென்றதற்கான ஆவணங்களைப் படிக்க மனமில்லாமல் விமர்சிக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், இரண்டு நாட்களுக்குள் ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றாரா, இல்லையா என்பதற்கான ஆவணங்களை வெளியிடுவேன் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இஸ்மாயில் கமிஷன் அறிக்கையில் ஸ்டாலின் பெயர் இருப்பது உள்ளிட்ட, மிசாவில் சிறை சென்றதற்கான ஆவணங்களை திமுகவினர் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு அமைச்சருக்குப் பதிலடி கொடுத்துவந்தனர். இருந்தாலும் அந்த அவங்களில் எல்லாம் ஸ்டாலின் சிறை சென்றார் ஆனால் எதற்காக சென்றார் என்ற தகவல் எதும் விளக்கமாக குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில் எதிர் தரப்பினர் ஸ்டாலின் எதற்காக சிறை சென்றார் என்ற மறைக்கப்பட்ட தகவல்கள் என சிலவற்றையும் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை. மிசாவின்போது போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ செய்யாத ஸ்டாலின் எதற்காக கைதானார் என்றே கேட்டேன். மேலும் மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான விடையை அவர்கள் கொடுத்து விட்டனர். ஆனால் ஸ்டாலின் மிசா விவகாரத்தில் என் நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என்று கூறியுள்ளார்.

அவர் கூறியதை வைத்து பார்க்கும் போது மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதாகவில்லை என்று தான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை என உறுதியாக உள்ளது தெளிவாகிறது. மேலும் இதன் மூலமாக ஸ்டாலின் எதற்காக கைதானார் என்ற கேள்வியை எழுப்பி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.