தாய்க்கு தெரியாமல் காதலனுடன் சிறுமி செய்த அசிங்கம் : கண்டித்த தாய்க்கு துடிக்க துடிக்க நேர்ந்த கொடூரம்..!!

0
76

பெரம்பலூரில் பச்சையம்மாள் என்ற பெண் வீட்டில் கேஸ் வெடித்து தீ விபத்தில் இறந்துள்ளார். இந்த மரணத்தில் சந்தேகம் எதுவும் ஏற்படாததால் போலீசார் இதனை விபத்து என்றே பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பிறகு பச்சையம்மாளின் வளர்ப்பு மகளான 16 வயதே நிரம்பிய காணாமல் போயுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பச்சையம்மாள் மற்றும் சிறுமியை பற்றி தீவிரமாக விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில் சிறுமி தொழுதூரில் உள்ள லாட்ஜில் மணிகண்டன் என்ற வாலிபருடன் தங்கி இருப்பதாக தெரிய வந்தது. அந்த சிறுமியையும் மணிகண்டனையும் பிடித்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்துள்ளனர்.

போலீஸ் விசாரணையில் சிறுமியின் காதலன் மணிகண்டன் என்றும் அவருடன் தான் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிந்தது. சிறுமியின் காதல் விவகாரம் பச்சையம்மளுக்கு தெரியவந்ததால் ஆரம்பத்தில் இருந்தே கண்டித்து வந்துள்ளார்.

இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி மணிகண்டனுடன் திருட்டுத்தனமாக யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சட்ட விரோதமானது என்பதால் இருவரும் அவரவர் வீட்டில் இருக்க முடிவு செய்தனர்.

இதற்கிடையில் இந்த ரகசிய திருமணம் பச்சையம்மாளுக்கு தெரியவந்ததால் சிறுமியை கண்டித்து புத்தி கூறியுள்ளார். இதனால் காதலியை பார்க்க முடியாத மணிகண்டன் சிறுமியை தேடி வீட்டிற்கு வந்துள்ளான்.

இதை பார்த்த பச்சையம்மாள் மணிகண்டனை வெளியே போகும்படியிம் தன் மகளை பார்க்க வரக்கூடாது என்று கூறி விரட்டியுள்ளார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த மணிகண்டன் பச்சையம்மாளை உதைத்து கீழே தள்ளி கொடூரமாக தாக்கியுள்ளான்.

இந்த தாக்குதலால் நிலை தடுமாறி கீழே விழுந்த பச்சையம்மாள் தலையில் அடிபட்டு மயங்கி விழுந்தார். இனிமேல் பச்சையம்மாள் இருந்தால் தன் காதலுக்கு இடையூறாக இருப்பார் என்று கேஸ் சிலிண்டருக்கு தீ வைத்து எரித்துள்ளான்.

இந்த கொலையை விபத்தாக நம்ப வைக்க சிறுமியை வைத்து கேஸ் வெடித்ததாக கூறி காதலனுடன் சேர்ந்து நாடகமாடியுள்ளார்‌. எல்லாம் முடிந்து சில நாட்களுக்கு பிறகு மணிகண்டன் அந்த சிறுமியுடன் ஊரை விட்டு தப்பியோடியுள்ளான்.

இந்த நிலையில் பிடிபட்ட சிறுமியையும் மணிகண்டனையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காமம் தலைக்கேறிய இந்த நாடக காதல் புள்ளிங்கோ தாயையே துடிக்க துடிக்க கொலை செய்த சம்பவம் பெரம்பலூர் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

author avatar
Parthipan K