வித்தியாசமாக சுகாதார துறை அமைச்சருக்கு பொக்கே கொடுத்து வாழ்த்து சொன்ன சினிமா பிரபலம் : நெகிழ்ந்து போன விஜயபாஸ்கர்!

0
82

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்கள் காப்பாற்ற போராடி வருகிறது. இந்த நோய்த்தொற்று தமிழ் நாட்டிலும் பரவி வருகிறது, இதனை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதனையடுத்து பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் படி கேட்டுக்கொண்டார். இந்த நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் பொது இடங்களில் கூட அல்லது வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தின் சுகாதாரத்துறையினர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்க இரவு பகல் பாராமல் அயராது பாடுபட்டு வருகிறது. இதற்கென தனது முழு நேரத்தையும் செலவிட்டு வரும் அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதார துறையினருக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் திரைப்பட இயக்குனர் பார்த்திபன் அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். அந்த சந்திப்பில் அமைச்சருக்கு 5 லிட்டர் கிருமி நாசினியை பொக்கேவாக(அன்பளிப்பாக) வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துயுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அமைச்சரையும் இயக்குனரையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

author avatar
Parthipan K