நோய்த்தொற்று பரவல் மூன்றாவது அலை! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

0
57

தமிழக சட்டசபையில் நேற்று சுகாதாரத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் நடந்தது அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அந்தத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்புகளை தாக்கல் செய்து இருக்கிறார்.

அந்தக் குறிப்பில் மத்திய அரசின் ஆதரவுடன் துணை சுகாதார நிலையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை எல்லோருக்கும் நல்வாழ்வு மையங்கள் ஆக மாற்றி கூடுதல் சேவைகளை வழங்க வழிவகை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியிருக்கிறார்.

நோய்த்தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்காக நாடு முழுவதும் இருக்கின்ற பல திறமையான சிறப்பு பொது சுகாதார வல்லுனர்கள் கொண்ட ஒரு சிறப்பு வழிகாட்டு குழு உண்டாக்கப்பட்டிருக்கிறது. இந்த வழிகாட்டு குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொரு வாரமும் கூடி மாநிலத்தின் தற்போதைய நோய்த்தொற்றை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

மாநில குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஒரு சிறப்பு உயர்மட்டக்குழு மூன்றாவது அலையில் நோய் தொற்று உண்டாகும். குழந்தைகளின் சிகிச்சைக்காக ஒரு செயல் திட்டத்தை தயாரித்து இருக்கிறது. மாநில மையம் மற்ற நாடுகளில் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்ற மூன்றாவது அலையின் தாக்கம் தொடர்பாக மிக விரிவாக ஆராய்ச்சி செய்து நோய் தொற்று வராமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.