போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமண்யன்… மருத்துவ செலவு பற்றி ட்வீட்!

0
83

போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமண்யன்… மருத்துவ செலவு பற்றி ட்வீட்!

சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிகக்ப்பட்டுள்ள போண்டா மணியை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் சந்தித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த நடிகரான போண்டாமணி தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக உழைத்து 1991 ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தில் பாக்யராஜோடு நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் கதாபாத்திரம் பேசப்படவே அடுத்தடுத்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சையில் குணமான அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் இப்போது அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டது. இது சம்மந்தமாக அவரின் சக நடிகர் பெஞ்சமின் வெளியிட்ட உருக்கமான வீடியோ வைரல் ஆனது.

இந்நிலையில் இன்று அவரை மருத்துவமனைக்கு சென்று தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் சென்று சந்தித்தார். அதன் பின்னர் அவர் பதிவிட்ட ட்வீட்டில் “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டா மணி அவர்களை சந்தித்து அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து அதற்கான முழு செலவையும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஏற்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது” எனக் கூறியுள்ளார்.