அழகுக்கு அழகு சேர்க்கும் மீரா மிதுன் தப்பி ஓட்டம்!.. போலீஸ் அதிகாரிகள் வலைவீச்சு..

0
96

அழகுக்கு அழகு சேர்க்கும் மீரா மிதுன் தப்பி ஓட்டம்!.. போலீஸ் அதிகாரிகள் வலைவீச்சு..

மீரா மிதுன் தமிழ் செல்வி என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழ் மற்றும் சினிமா துறையில் மீரா மிதுன் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். பிக் பாஸ் மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர். இந்நிலையில் இவர் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்துள்ளார் இதில் ஒரு பகுதி தான்,

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை கூறியதாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜாமீன் பெற்ற இவர்களுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது மீரா மிதுன் மட்டும் ஆஜராகவில்லை. அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் மட்டும் ஆஜராகியிருந்தார்.

இதனால் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாதபடி கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் இந்த வழக்கு இன்று 3 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஶ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்த போது மீரா மிதுன் எங்கு உள்ளார் என்று தேடி வருவதாகவும் அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் விரைவில் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் ரசிகர்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அவர் எங்கு சென்றுள்ளார் என வலை வீசி போலீசார்கள் தேடி வருகின்றனர்.

 

author avatar
Parthipan K