ரெய்டால் முடக்கப்பட்ட விஜய்:சென்னைக்குத் திரும்பிய படக்குழு!மாஸ்டர் படப்பிடிப்பு பாதிப்பு!

0
71

ரெய்டால் முடக்கப்பட்ட விஜய்:சென்னைக்குத் திரும்பிய படக்குழு!மாஸ்டர் படப்பிடிப்பு பாதிப்பு!

விஜய் வீட்டில் கடந்த இரு தினங்களாக ரெய்டு நடந்து வரும் வேளையில் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று முதல் நடைபெற்று வரும் சோதனையில் பல கோடு ரூபாய் கைப்பற்ற பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் முக்கியமாக பிகில் படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்ல. வீட்டில் ரெய்டு நடப்பதால் விஜய்யின் செல்போன் மற்றும் வீட்டு தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

நெய்வேலி ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே அவர் வந்து விட்டதாலும் அவருடன் தொடர்பு கொள்ளாத  முடியாத நிலையிலும் அவர் எப்பொது திரும்ப ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் எனத் தெரியவில்லை. அதனால் படக்குழு மொத்தமும் படப்பிடிப்பை ரத்து செய்து செய்துவிடு சென்னைக்கு திரும்பியுள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு தள்ளிப்போவதால் ரிலிஸ் சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

author avatar
Parthipan K