திருமண விழாவில் மாமனாரை மருமகன் என்று பேசிய மு.க.ஸ்டாலின்! திருமணத்திற்கு வந்தவர்கள் பேரதிர்ச்சி

0
85

திருமண விழாவில் மாமனாரை மருமகன் என்று பேசிய மு.க.ஸ்டாலின்! திருமணத்திற்கு வந்தவர்கள் பேரதிர்ச்சி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‌கட்சி பிரமுகர் இல்ல விழாவில், மணமகளின் கணவராக மாமனாரின் பெயரை மாற்றி கூறி உளறியதால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை கிராமத்தில் திமுக பிரமுகர் இல்ல திருமணம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மணமகன் சுப்பிரமணியனுக்கும் – மணமகள் பிரதீபாவுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்.

அப்போது, பெண்ணின் மாமனார் காசிவிஸ்வநாதன் பெயரை மணமகன் என்று குறிப்பிட்டு பேசினார், இதை கேட்டு திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள், திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். சுதாரித்து கொண்ட ஸ்டாலின், தன் உளறல் பேச்சை உணர்ந்த உடன் திருத்தி கொண்டு, சுப்பிரமணியன் என மணமகன் பெயரை கூறினார். திருமண ‌விழாவில் பேசி முடிப்பதற்குள் மூன்று இடங்களில் தடுமாறி திருமணத்திற்கு வந்தவர்களை சிரிக்க செய்து, திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்தார்.

தொடர்ந்து உளறல் பாணியை கடைப்பிடிப்பதால் சமூக வலைத்தளங்களில் கேளி கிண்டல்களுக்கு நம்ம தலைவரே வழி வகுத்து கொடுத்துவிடுகிறார் என்று திமுக உடன்பிறப்புகளே புலம்பி வருகின்றனர் என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

author avatar
Parthipan K