ஒரு வயதான நபரின் செல்போனில் சிறு குழந்தைகளின் பல வன்கொடுமை வீடியோக்கள்! குழந்தையின் தாயும் இதற்கு உடைமை!

0
101
Many child abuse videos on an old person's cell phone! The baby's mother also owns it!
Many child abuse videos on an old person's cell phone! The baby's mother also owns it!

ஒரு வயதான நபரின் செல்போனில் சிறு குழந்தைகளின் பல வன்கொடுமை வீடியோக்கள்! குழந்தையின் தாயும் இதற்கு உடந்தை!

சென்னையில் ஒரு சிறிய பெட்டிக் கடை நடத்துபவர் பெருமாள். இவருக்கு வயது 50 ஐ கடந்து இருக்கும். அந்தக் கடையில் போலீசார் குட்கா பரிசோதனைக்காக சோதனை செய்யும் போது அங்கு 30 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. எனவே அவரது கைபேசியில் யாரிடம் இருந்து சரக்குகளை வாங்குகிறார் என்று பார்ப்பதற்காக கைபேசியை கேட்டபோது அவர் தர மறுத்திருக்கிறார். எதற்காக கைபேசியை தரவேண்டும் எனவும்,  தரமுடியாது என்றும் கூறியிருக்கிறார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது கைபேசியை கைப்பற்றி பார்த்தபோது அதில் பல சிறு குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கும் வீடியோக்கள் பல தினுசில் இருந்தது. இது பற்றி அவரிடம் மேலும் விசாரித்தபோது அந்த ஏரியாவில் அந்த நபருக்கும் திருமணமான வேறொரு பெண்ணுக்கும் இடையே ஒரு தகாத உறவு இருந்தது. இந்த உறவின் காரணமாக பெற்ற தாய் கண் முன்னாலேயே அந்த குழந்தையின் மீது தவறான பல செயல்களை செய்துள்ளார்.

இதே போல பல குழந்தைகளின் வீடியோக்களும் அவரது கைபேசியில் இருந்து உள்ளது. அந்த குழந்தைகள் அனைத்தும் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள். போலீசார் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் இந்த பெட்டிக்கடை நபர் பெருமாள் அவரது கடைக்கு வரும் குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை என்றும் தெரிகிறது. இந்த சம்பவத்தின் காரணமாக அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து  அவருடன் அதே ஏரியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணையும் செய்து வருகின்றனர்.