இந்த திருமணத்தில் கலந்து கொண்டதால் கட்டாய ஓய்வு! நூதன தண்டனை விதித்த அதிகாரிகள்!

0
88
Mandatory retirement from attending this wedding! New sentencing officers!
Mandatory retirement from attending this wedding! New sentencing officers!

இந்த திருமணத்தில் கலந்து கொண்டதால் கட்டாய ஓய்வு! நூதன தண்டனை விதித்த அதிகாரிகள்!

கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட பெண் போலீஸ் உட்பட 3 போலீஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கி கொப்பல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் 3 பேரும் கட்டாய விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

கொப்பல் மாவட்டத்தில் கங்காவதி போலீஸ் சூப்பிரண்டாக இருந்து வருபவர் ருத்ரேஷ், இதுபோல் கங்காவதி புறநகர் போலீஸ் சர்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் உதயரவி. மேலும் கனககிரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தாராபாய்.

கொப்பல் மாவட்டத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு மாணவரான எல்லலிங்கா கொலை செய்யப்பட்டு இருந்தார். அந்த கொலை சம்பவம் கொப்பலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த கொலை வழக்கில் அனுமேஷ் நாயக் என்பவரை போலீசார் கைது செய்து இருந்தனர் இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

அனுமேஷ் நாயகின் மகன் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு, சர்க்கிள் இன்ஸ்பெக்டர், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய 3 பேரும் கலந்து கொண்டனர். இந்த விஷயம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரின் மகன் திருமணத்தில் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு இருந்தது. அங்கு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.

அவர்கள் 3 பேரும் திருமணத்தில் கலந்து கொண்டதற்கான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இது போலீசாருக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியது இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் ருத்ரேஷ், உதயரவி, தாராபாய் ஆகிய 3 பேருக்கும் கட்டாய விடுப்பு அளித்து, அவர்களுக்கு தண்டனை வழங்கி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். மேலும் திருமணத்தில் கலந்து கொண்டது குறித்து 3 பேரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.