குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி.. கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மகன்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

0
98

குடிபோதையியல் தகராறு செய்த தொழிலாளியை மனைவியும் மகனும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சிக்கராயபுரம், மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலி தொழிலாளியான இவருக்கு உமாராணி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். கோவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது பிரேதபரிசோதனை அறிக்கையில், அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரின் மனைவி மற்றும் மகனிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கோவிந்தராஜூக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவதன்று மது அருந்தி விட்டு வந்த அவர் சமையல் செய்து கொடுக்க சொல்லி தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார்.

தினமும் குடித்து விட்டு தகராறு செய்து வருவதால் ஆத்திரமடைந்த அவரது மகன் இரும்பு கம்பியால் அடித்து விட்டு அங்கிருந்து உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். மகனுடன் உமாராணியும் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின், மற்றவர்களிடம் கோவிந்தராஜ் அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இந்த வாக்குமூலத்தை அடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவிந்தராஜை அவரது மனைவியும் சேர்ந்து கொலை செய்தாரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலாளியை கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.