சூட்கேஸில் கிடந்த ஆண் சடலத்தால் பரபரப்பு.. காவல்துறையினர் விசாரணை..!

0
86

அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் ரயில் நிலையத்தில் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. முதலில் இதனை கண்டுகொள்ளாத மக்கள் நேரமாக அது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் சூட்கேஸை திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். அந்த சூட்கேஸில் 30 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடந்தது.அந்த சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் அந்த நபர் யார் என்பதும் குறித்தும், அந்த சூட்கேஸை விட்டு சென்றது யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். முதற்கட்டமாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து, ரயில்வே உதவி கமிஷ்னர் தெரிவிக்கையில், தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தோம். மேலும், அந்த சூட்கேஸ் குறித்து தகவல்களை சேகரித்து வருகிறோம். கடந்த திங்கட் கிழமையில் இருந்து சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், சிசிடிவி காட்சிகளில் ஒரு நபர் அந்த சூட்கேஸை வைத்து சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து, அந்த நபர் யார் என்பது குறித்தும் குற்றத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சூட்கேஸ்லால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.