மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்!

0
148

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் சுவாசப் பிரச்சினை, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவு காரணமாக லக்னோவில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த லால்ஜி மருத்துவ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த செய்தியை அவரது மகன் அசுதோஷ் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வந்தாலும் உடல்நிலை பாதிப்பு காரணமாக சிலர் உயிரிழந்து வருகின்றனர்.

 

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனின் உடல்நிலை மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அளித்துவந்த நிலையில், அவருக்கு பதிலாக உத்திரபிரதேச ஆளுநராக இருக்கும் ஆனந்திபெண் படேல் மத்திய பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் முன்னிலையில் தான் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது 28 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆனந்திபெண் படேல் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

author avatar
Jayachandiran