அஇஅதிமுக கழக முன்னாள் அவை தலைவர் மதுசூதனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை!

0
88
அஇஅதிமுக கழக முன்னாள் அவை தலைவர் மதுசூதனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்  அலுவலக வளாகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நிர்வாகியும், முன்னாள் கழக அவை தலைவருமான மது சூதனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு தமிழக முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்  சையது கான், ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, சேகர், பெரியகுளம் நகர் கழக செயலாளர் அப்துல் சமது,மாவட்ட கழக இணைச் செயலாளர் மஞ்சுளா முருகன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகானந்தம், நகர எம் ஜி ஆர் மன்ற செயலாளர் வி டி எஸ் ராஜவேலு, மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் தவமணி, தேனி நகர கழக செயலாளர் ரங்கநாதன் ,பொதுக்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், அரண்மனை சுப்பு, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நாராயணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜகோபால், உட்பட மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் ,பேரூர் கழக நிர்வாகிகள் ,சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.