சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! பரபரப்பு சம்பவம்!

0
90
Luxury bus overturned in a ditch accident! Sensational incident!
Luxury bus overturned in a ditch accident! Sensational incident!

சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! பரபரப்பு சம்பவம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அதிகளவில் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் போக்குவரத்து சேவைகளும் இயங்க தொடங்கியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் தீபாவளி திருநாளையொட்டி வெளியூரில் பணிபுரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக இருக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.மேலும் ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் பல மடங்கு உயர்ந்தது.

இந்நிலையில் அரசு சொகுசு பேருந்து பெரும்பாலும் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் பெங்களூரில் இருந்து அரசு சொகுசு பேருந்தானது  திருச்சியை  நோக்கி 49 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.இந்த பேருந்தானது இன்று அதிகாலை திருச்சி அருகே மஞ்சகோரை பகுதியில் வந்து போது. அங்கிருந்த வளைவில் பேருந்தை ஓட்டுநர் திருப்ப முயன்றார்.

அப்போது அந்த பேருந்தானது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.அந்த விபத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட மொத்தம் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீஸார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.அந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K