நாடே மெச்சும் தமிழக முதல்வர்! காரணம் என்ன தெரியுமா!

0
68

இந்தியாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவிய போது அதனை சிறப்பாக எதிர்கொண்ட மாநிலங்களில் கேரளா முதன்மையாக இருந்தது, என்று பலர் கொக்கரித்து வந்தார்கள். எல்லா மாநிலங்களும் அந்த மாநிலத்தை ஒரு முன்னுதாரணமாக வைத்து கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தார்கள். தமிழகத்தில் கூட கம்யூனிஸ்டுகள் கேரளாவை கொரோனா விஷயத்தில் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இதன் காரணமாக ,அந்த மாநிலத்தில் தோற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 858 ஆக அதிகரித்திருக்கின்றது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 78 694 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வைரஸ் பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 6119 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இதன் காரணமாக மாநிலத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 529 ஆக அதிகரித்து இருக்கின்றது.

இருந்தாலும், வைரஸின் தாக்குதலுக்கு இன்று 25 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இதன் மூலம் கேரள மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு ,உயிரிழந்தவரின் மொத்த எண்ணிக்கை 1796 அதிகரித்திருக்கின்றது.

அதேபோல வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், கேரள மாநிலம் இரண்டாவது இடத்திலும் ,இருக்கின்றன ஆனாலும் அனைவராலும் வீணாக குறை சொல்லப்பட்டு வந்த தமிழகம் 10-ஆவது இடத்தில் இருக்கின்றது.

இவையெல்லாம் தமிழக அரசு எடுத்த உறுதியான நடவடிக்கையின் பலன் என்று இப்போது பல அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட அனைவரும் மார்தட்டி வருகிறார்கள்.