காதலியை காட்டிற்கு அழைத்துச் சென்ற காதலன்! நண்பர்களுக்கு விருந்தாக்க நினைத்த கற்பழிப்பு பிளான்..!!

0
193

காதலியை காட்டிற்கு அழைத்துச் சென்ற காதலன்! நண்பர்களுக்கு விருந்தாக்க நினைத்த கற்பழிப்பு பிளான்..!!

வேலூர் மாவட்டம் அமிர்தி காட்டுப் பகுதியில் தனது காதலியை காட்டிற்குள் அழைத்துச் சென்று மூன்று நண்பர்களுடன் ஓட ஓட விரட்டி கற்பழிக்க முயன்ற கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமிர்தி பகுதியில் உள்ள வன உயிரியல் பூங்காவிற்கு தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டுமே சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதையடுத்து கல்லூரி மாணவியும் அவருடைய காதலனும் பூங்காவை சுற்றிப் பார்த்த பிறகு, சில கிலோ மீட்டர்களை தாண்டி தனது காதலியை அடர்ந்த காட்டுப் பகுதிக்கு காதலன் அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், காட்டில் ஏற்கனவே மூன்று இளைஞர்கள் கற்பழிப்பு திட்டத்துடன் இருந்துள்ளனர். காதலுடன் சேர்ந்து நால்வரும் அப்பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்தனர். அவர்களிடமிருந்து கிழிந்த ஆடைகளுடன் தப்பித்து காப்பாற்றுங்கள் என்று கத்திக்கொண்டே ஓடினார். காட்டிற்குள் விறகு வெட்டிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்து ஓடிவந்த பெண்ணிற்கு பாதுகாப்பாக நின்றார்.

அப்பெண்ணை துரத்தி வந்தவர்களிடம் கத்தியை காட்டி அந்த நான்கு பேரையும் எச்சரித்து, வேகமாக விசிலடிக்க ஆரம்பித்தார். விசில் சத்தம் கேட்டு அருகே இருந்த சிலர் சம்பவ இடத்திற்கு வந்ததால் அந்த நான்கு இளைஞர்களும் தப்பி ஓடினர். ஓடியவர்களை துரத்திச் சென்றதில் அப்பெண்ணை காதலித்தவன் மட்டும் பிடிபட்டான். பின்னர் அவனுக்கு அங்கேயே சராமாரியாக அடி கொடுத்து ஊருக்குள் அழைத்து வரப்பட்டு அங்கேயும் மக்களிடம் தர்ம அடி வாங்கினான்.

இதையடுத்து மாணவியின் பெற்றோருக்கு கிராம மக்கள் செல்போன் மூலம் தகவல் கொடுத்த பிறகு, அப்பெண்ணின் பெற்றோர் சம்பவம் நடந்த அன்று இரவு 8 மணிக்கு வந்தனர். கிராம மக்கள் அப்பெண்ணிற்கும் அவருடைய பெற்றோருக்கும் புத்திமதி சொல்லி அன்றிரவு 10 மணிக்கு மேல் திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும், பிடிபட்ட காதலன் வேலூர் வேலப்பாடியைச் சேர்ந்தவன் என்றும் அவன்தான் திட்டமிட்டு தனது நண்பர்களையும் காட்டிற்கு வரவழைத்துள்ளான் என்றும் தெரிய வந்தது.

காதல் என்கிற பெயரில் ஆண்களை நம்பி எந்த பெண்களும் பூங்கா மற்றும் காட்டிற்குள் வர வேண்டாம் என்று அந்த முதியவர் கேட்டுக் கொண்டார். இதே போன்று வேலூர் கோட்டையில் காதலனை தாக்கிவிட்டு காதலியை தூக்கிச் சென்று கற்பழித்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran