பள்ளி வளாகத்தில் விஷம் குடித்த காதல் ஜோடி! உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்!

0
89
Love couple who drank poison in the school campus! A lover who took his own life!
Love couple who drank poison in the school campus! A lover who took his own life!

பள்ளி வளாகத்தில் விஷம் குடித்த காதல் ஜோடி! உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்!

உத்திரபிரதேச மாநிலம் மகாராஜ் கஞ்சு பகுதியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. மேலும் அங்கு செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் 12 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவனும் (20) , அதே வகுப்பில் படிக்கும் மாணவியும் (16) ஒரே கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது.

அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர். அப்போது அவர்களின் பெற்றோருக்கு இந்த விவகாரம் தெரிய வந்ததும் அவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அந்த சிறுமிக்கு பதினாறு வயதே ஆன நிலையில் மைனர் எனக் கூறி சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் மனமுடைந்த மாணவன் மற்றும் சிறுமி இருவரும் வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளனர். பள்ளி வளாகத்தில் இருவரும் விஷம் குடித்துள்ளனர். அதனை கவனித்த பள்ளி ஊழியர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்க அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஒரே பள்ளியில் படித்த இருவரும் காதலித்து வந்தனர். பெற்றோர் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக இருவரும் மனமடைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அந்த மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K