தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட்15 வரை நீட்டிப்பு!! திரையரங்குகள் திறக்க அனுமதி!!

0
65

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட்15 வரை நீட்டிப்பு!! திரையரங்குகள் திறக்க அனுமதி!!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. அத்துடன் மாணவர்களின் நலன்கருதி பெரும்பாலான மாநிலங்களில் பொதுத்தேர்வு நடத்தப்படாமலேயே மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளற்ற ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், புதுச்சேரியை பொறுத்த வரையிலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கின்றது. இதனை தொடர்ந்து 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி மற்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் இரவு 9 மணி வரை திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா தலங்களில் 50 சதவீதம் பேருக்கு அனுமதி, 100பணியாளர்களுடன் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு நடத்த அனுமதி மற்றும் மதுபான கடைகள் உடன் இயங்கும் பார்கள் 50 சதவிகித நபர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

author avatar
Jayachithra