இந்த அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
185
#image_title

இந்த அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஆவின் நிறுவனமானது பல்வேறு நிலைகளில் கொழுப்பு சத்து சதவீதத்துக்கு ஏற்ப பால் விற்பனையை செய்து வருகின்றது.சமன்படுத்திய பால், நிலை படுத்திய பால்,பசும்பால் என ஒவ்வொரு வகையிலான பால் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் பச்சை நிற பால் பாக்கெட் அரை லிட்டர் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் கோவை மாவட்டத்தில் ஆவின் நிர்வாகம் தற்போது பசும்பாலை கொழுப்பு சத்துடன் அரை லிட்டர் பால் பாக்கெட் 22 ரூபாய் விற்பனை செய்து வருகின்றது. கொழுப்பு அடர்த்தி குறைக்கப்பட்ட பச்சை பாக்கெட் பசும்பால் 22 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மற்ற ஊர்களில் இந்த விலை உயர்வு விரைவில் அமல்படுத்தப்படும் என கூறப்படுகின்றது.

மேலும் தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் ஆவின் நிறுவனம் மிக குறைந்த விலையில் மக்களுக்கு பால் விநியோகம் செய்து வருகின்றது. இந்நிலையில் ஆவின் நிறுவனம் சார்பில் மக்களுக்கு மாதாந்திர அட்டைகள் சலுகைகளுடன் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அட்டையின் மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் ஆவின் அட்டையின் மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு பால் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக ஆதார் எண்ணை சேகரிக்கப்படுவதாகவும், அதற்கான பணிகள் மாவட்ட தோறும் மண்டல வாரியாக உள்ள அலுவலகங்களில் நடைபெற்று வருவதாகவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K