எம்ஜிஆர் உணர்ந்ததை போல ஓபிஎஸ்ஸூம் உணர்ந்து கொள்வார்- நாசுக்காக போட்டுடைத்த புகழேந்தி!

0
259
#image_title

எம்ஜிஆர் உணர்ந்ததை போல ஓபிஎஸ்ஸூம் உணர்ந்து கொள்வார்- நாசுக்காக போட்டுடைத்த புகழேந்தி!

எம்ஜிஆர் உணர்ந்து கொண்டதை போல பாஜவை பற்றி ஓபிஎஸும் உணர்ந்துகொள்வார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24ம் தேதி காலமானார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில், அவரது தாயாரின் உருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் எம்.பியான கே.சி.பழனிசாமி, ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி ‘ஒரு தலைவரின் தாயார் மறைவுக்கு இரங்கல் கூட தெரிவிக்காதவர் எடப்பாடி பழனிசாமி. செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய பிறகு தான், தன் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். மேலும் ஓபிஎஸ்ஸை பாஜக முழுமையாக கைவிட்டு விட்டதால், இனி அவர்களை நம்பி எந்த பயனும் இல்லை’ என பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது குறித்து புகழேந்தியிடம் கேள்வி கேட்டபோது, ‘‘அவர் மூத்த அரசியல் தலைவர். இதேபோல் ஒரு காலத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறிய போது, முதலில் அதனை ஏற்றுக் கொள்ளாத எம்ஜிஆர் அவர்கள் பின்னர் அதனை உணர்ந்து கொண்டார்.

அதே போல தமிழ்நாடு அரசியலில் நிறைய மாற்றங்கள் விரைவில் ஏற்படப் போகிறது என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஓபிஎஸ்ஸை பாஜக கைவிட்டுவிட்டது என்பதை ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டுள்ளார். அதோடு ஓபிஎஸ் இனியாவது பாஜகவை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் எனவும் நாசுக்காக கூறியுள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உட்பட பலர் ஓபிஎஸ் மீது வைக்கும் குற்றச்சாட்டு அவர் பாஜகவிற்கு மிகவும் அடிபணிந்து நடக்கிறார் என்பது தான். இதனால் பலரும் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி இபிஎஸ் அணியில் இணைந்துள்ளனர். அதிமுகவினர் ஓபிஎஸ்ஸை ஓரம்கட்ட இதுவும் ஒரு முக்கிய காரணம் தான். இந்நிலையில் ஓபிஎஸ்ஸை பாஜக முழுமையாக கைவிட்டு விட்டதால், இனி அவர்களை நம்பி எந்த பயனும் இல்லை என பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதை சூசகமாக ஆமோத்து புகழேந்தி பேசியுள்ளது ஓபிஎஸ் அணியினரின் மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

author avatar
Parthipan K