படத்தின் மூலம் பதில் சொல்கிறேன் ….! விஜய் சேதுபதி நிதான பேச்சு ……!

0
81

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கின்றேன் என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரன் தனது சமூக வலைதள பக்கத்தில் முகப்பு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதற்கு இயக்குனர் சீனு ராமசாமி, பாரதிராஜா, மற்றும் கவிஞர்கள் தாமரை, வைரமுத்து, மற்றும் சீமான், திருமுருகன் காந்தி, என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் முத்தையா முரளிதரனின் முகப்பு படமான எண்ணூரில் தொடர்ச்சியாக நடிக்கிறேனா அல்லது இல்லையா என்பதை ஓரிரு நாட்களுக்குள் தெரிவிப்பதாக, விஜய் சேதுபதி கூறியிருந்தார்.

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின்றன. அவரின் வாழ்க்கை வரலாறு ஒரு நல்ல கதை என்பதால் அதிலிருந்து பின்வாங்க விரும்பவில்லை எனவும், இப்போது முன்வைக்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் அந்த எண்ணூறு படம் மூலமாக பதில் சொல்கிறேன் என்றும் அவர் கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு ஆதரவாக முத்தையா முரளிதரன் பேசியதாக பலரும் இந்த படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில். விஜய் சேதுபதியின் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.