நெருப்பில் சுடப்பட்டு விற்பனையாகும் பருப்பு சாதம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

0
38

நெருப்பில் சுடப்பட்டு விற்பனையாகும் பருப்பு சாதம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…

 

அன்றாடம் ஒரு வித்தியாசமான வீடியோ இணையத்தில் வைராலகி வரும் நிலையில் தற்பொழுது நெருப்பில் சுடப்பட்டு தயாரான பருப்பு உணவு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

 

சமூக வலைதளங்களில் அன்றாடம் வித்தியாசமான வீடியோக்கள் வைராகின்றது. அந்த வித்தியாசமான வீடியோக்கள் மூலமாக அந்த வீடியோவில் இருக்கும் நபர்களும் பிரபலம் ஆகின்றனர். அந்த வகையில் சாலையோரக் கடையில் நெருப்பை வைத்து சுடப்பட்டு தயார் செய்யப்பட்ட பருப்பு உணவு தொடர்பான வீடியோ தற்பொழுது பேசும் பொருளாக உருமாறி உள்ளது. இந்த சம்பவம் வட இந்தியாவில் நடந்துள்ளது.

 

வட இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருள்களில் முக்கியமான இடத்தை பிடிப்பது டால்(தால்) என்று அழைக்கப்படும் துவரம் பருப்பு தான். இந்த பருப்பை வைத்து ஏராளமான வித்தியாசமான உணவுகளை தயார் செய்து ருசித்து சாப்பிட்டு வருகின்றனர்.  இந்நிலையில் ஹரித்துவார் பகுதியில் உள்ள சாலையோர கடை ஒன்றில் தயார் செய்து விற்பனை ஆகும் சூடான பருப்பு நெய் உணவு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

இந்த சூடான நெய் பருப்பு உணவு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது என்றால் கடைக்காரர் இலை ஒன்றை முதலில்  வைக்கின்றார். அதன் மேல் பருப்பை வைத்து அதனுடன் கடலை மற்றும் தேவையான பொருள்கள் வைக்கப்படுகின்றது. பின்னர் அந்த கடைக்காரர் அதை நன்கு கிளறி விடுகின்றார். அதன் பின்னர் கடைக்காரர்  கரண்டியில் சிறிதளவு நெய் எடுத்து அந்த நெய்யுடன் சேர்த்து அடுப்பில் இருந்து தீயை எடுத்து குழம்பு போல் ஊற்றுகிறார்.

 

பின்னர் அந்த உணவு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பின்னர் அந்த கடைக்காரர் நெருப்பை அனைத்து விட்டு அந்த உணவை சாப்பிட பறிமாறுகிறார். வெறும் சாகசமாக மட்டுமில்லாமல் அந்த உணவு எரிந்து வரும் வாசம் வித்தியாசமான சுவையை தருவதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.