புதிய பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் அறிவிப்பு !!

0
69

இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட  மாவட்டங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகளில் விவரங்கள் குறித்து  தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில்  வருகின்ற 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ,தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் புதியதாக பிடிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கீழ் இயங்கி வரும் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிரித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தொகுதிகளின் மாவட்ட வாரியான விபரங்கள் ;

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, பல்லாவரம், தாம்பரம் , திருப்பேரூர், செய்யூர், சோழிங்கநல்லூர், மதுராந்தகம்.

வேலூர் : வேலூர், காட்பாடி, அணைக்கட்டு ,குடியாத்தம், கீழவைத்தியனாங்குப்பம்.

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் ,அரக்கோணம்.

விழுப்புரம் : திண்டிவனம்,விழுப்புரம், செஞ்சி, மைலம், வானூர் ,விக்கிரவாண்டி , திருக்கோவலூர்.

திருப்பத்தூர் : திருப்பத்தூர், வாணியம்பாடி ,ஆம்பூர், ஜோலார்பேட்டை.

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி (தனி), உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம்.

நெல்லை : நெல்லை பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி ,ராதாபுரம்.

தென்காசி : தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர்.

author avatar
Parthipan K