பழம்பெரும் நடிகர் மரணம்! திரையுலகினர் அஞ்சலி!

0
80
Legendary actor dies! Tribute to the moviegoers!
Legendary actor dies! Tribute to the moviegoers!

பழம்பெரும் நடிகர் மரணம்! திரையுலகினர் அஞ்சலி!

கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலையானது நமக்கு பல்வேறு அதிர்ச்சிகளை தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது.இதில் நமக்கு பிடித்த மிகவும் பரிச்சயமான நபர்களை நம் கண் எதிரே இழந்துவருகிறோம்.

அந்தவகையில் திரையுலக பிரபலங்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பலரும் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்து வருகின்றனர்.பல பிரபலங்கள் பல்வேறு உதவிகளையும், நிவாரண நிதியையும் கொடுத்து வருகின்றனர்.

தற்போது நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளார். மே 15, 1950 ல் பிறந்த இவர் 1976 ம் ஆண்டில் இருந்து மேடை கலைஞர் ஆகவும், படிப்படியே பல படங்களிலும் நடித்து வந்துள்ளார்.

1990 ம் வருடம் மருது பாண்டி படத்தின் மூலம் பிரபலமானார்.அதன் பிறகு திருமதி பழனிசாமி, தமிழச்சி போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.அதனை தொடர்ந்து சின்னத்திரை நாடகங்களிலும் நடித்து வந்தார்.கோலங்கள், வாணிராணி போன்றவற்றிலும் நடித்து உள்ளார்.

இவர் மறைவிற்கு திரையுலகினர் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.