எஸ். பி. பியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த நாட்டு தலைவர்கள்!

0
91

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இசை உலகின் சகாப்தமாக திகழ்ந்த எஸ்பிபியின் மறைவினால் அவரது வசீகரமான இனிய குரலை இனி கேட்கும் வாய்ப்பை இந்திய இசை உலகம் இழந்துவிட்டது. 

அவரது கோடானுகோடி ரசிகர்களால் ‘பாடும் நிலா’ என்று அன்பாக அழைக்கப்பட்ட எஸ்பி பாலசுப்ரமணியம், பத்ம பூஷன் உள்ளிட்ட பல்வேறு தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்களது ட்விட்டர் பதிவில்,“எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மறைவு துரதிருஷ்டவசமானது. அவரது மறைவால் இந்திய இசை உலகம் தமது சிறந்த கலைஞனை இழந்து தவிக்கிறது. அவரது மறைவு இந்திய திரை உலகிற்கு பேரிழப்பாகும். தமது இனிமையான குரல் மற்றும் இசையால் இந்தியர்களின் இல்லங்களையும், ரசிகர்களின் மனங்களையும் பல தலைமுறைகளாக மகிழ்வித்து வந்தவர் எஸ்பிபி. அவரை இழந்து வாடும் குடும்பத்தின் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.

author avatar
Parthipan K