ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாத செயல் எல்.டி.எப் அமைப்பாளர் ஈ.பி.ஜெயராஜன்!!

0
216
#image_title

ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாத செயல் எல்.டி.எப் அமைப்பாளர் ஈ.பி.ஜெயராஜன்!!

ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாத செயல், மூல காரணத்தை கண்டறிய வேண்டும்’என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எப்) அமைப்பாளர் ஈ.பி.ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.தேசிய மற்றும் மாநில அளவில் காவல் துறை எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் கோழிக்கோடு எலந்தூர் அருகே வந்த போது மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயை கண்டதும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த சஹாரா(2), ரஹ்மத், நெளபிக் ஆகிய 3 பேர் ரெயில்வே தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

தீ வைத்து எரித்ததில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் என எல்.டி.எப்., அமைப்பாளர் இ.பி.ஜெயராஜன் தெரிவித்துள்ளார். கேரளாவின் அமைதியை சீர்குலைப்பதே இதன் நோக்கம்.மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கேரளாவின் அமைதியை சீர்குலைப்பதே இதன் நோக்கம். கேரளா போன்ற மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்க வாய்ப்பில்லை. இதற்கான மூல காரணத்தை கண்டறிய வேண்டும் எனவும் இதன் பின்னணியில் தீவிரவாத செயல் இருப்பதாகவும் தேசிய மற்றும் மாநில அளவில் காவல் துறை எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாகவும் ஈ.பி.ஜெயராஜன் தெரிவித்தார்.

author avatar
Savitha