கொரோனாவால் உயிரிழந்த கணவரை அடக்கம் செய்துவிட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை! விருதுநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

0
99
கொரோனாவால் உயிரிழந்த கணவரை அடக்கம் செய்துவிட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை! விருதுநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
கொரோனாவால் உயிரிழந்த கணவரை அடக்கம் செய்துவிட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை! விருதுநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கணவரை அடக்கம் செய்து விட்டு வீட்டிற்கு வந்த உடனேயே மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபாகர் என்பவர் விருதுநகரில் வசித்து வருபவர்.இவர் ரயிர்வே துறையில் வேலை பார்த்து வந்தார்.மேலும் இவருக்கு ராமபிரபாவதி என்ற மனைவி உள்ளார்.இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசியராக பணிபுரிந்து வருகிறார்.இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த ஜூன் 24 ஆம் தேதி பிரபாகருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது இதில் அவருக்கு பாசிட்டிவ் என்று வந்ததால் கடந்த மூன்று தினங்களாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.மேலும் இவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதனையடுத்து இவரது ஊடல் சொந்த ஊரான தூத்துக்குடியில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் இவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருந்ததால் இவரது மகள்கள் இருவருக்கும் சோதனை செய்ய மருத்துவமனைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.அப்பொழுது இரு மகள்களும் அம்மாவையும் சோதனை செய்ய வரும்படி கேட்டனர் பிரபாவதி மறுத்ததால் மகள்கள் இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராம பிரபாவதி கணவன் இறந்த துக்கத்தில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து இவரது உடல் போஸ்ட் மார்டத்திற்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K